தலைவர் ஆனந்த் பில்போவில் ஆடிய கையோடு சைனாவில் (நேற்று முதல்) ஆடுகிறார். ஆண்டின் Highest Rating average உள்ள ஆட்டத் தொடர் பில்போதான் என்ற போதும், 4 பேர் ஆளுக்கு ஆறு ஆட்டங்கள் ஆடுவதை விட, 6 பேர் ஆளுக்கு பத்து ஆட்டங்கள் ஆடுவது (டபிள் ரவுண்ட் ராபின் முறையில்) ரசிகர்களுக்கு இன்னும் உவப்பாக அமையும்.

ரேட்டிங்கில் 2800-ஐ தாண்டிய மூவர் (கார்ல்சன், ஆனந்த்,டொபலோவ்) இந்தப் போட்டியில் ஆடுவதிலிருந்து தொடரின் மதிப்பைப் புரிந்து கொள்ளலாம். இவர்கள் தவிர காஷிமோவ், பார்காட், மண்ணின் மைந்தர் வாங் யூ-வும் பங்கு பெறுகின்றனர்.

போன வருடம் சுலபமாக கார்ல்சன் வென்றார். மட மட என தர வரிசையில் முன்னேறி முதல் இடத்தை அடைந்த 19 வயது கார்ல்சன் இந்த வருடம் சில சறுக்கல்கள் ஏற்பட்டுள்ளன. ஒலிம்பியாடிலும், பில்போவிலும் அவரடைந்த தோல்விகள் பற்றிச் சொல்லும் போது, “ஆனந்த், கிராம்னிக் போன்ற தெர்ந்தவர்களுடன் அடைந்த தோல்விகளுக்கு கார்ல்சனின் ஃபாஷன் உலக வாழ்க்கையும், வயது கோளாரில் எற்படும் கவனச் சிதறல்களும் காரணம் என்று சொல்வதே கார்ல்சனுக்கு பெரிய பெருமை.”, என்றுள்ளார் பிரபல செஸ் எழுத்தாளர் மிக் கிரீன்கார்ட்.

கிராம்னிக்கை வென்று உலக சாம்பியன் ஆனதிலிருந்து, ஆனந்தின் கவனம் எல்லாம் டோர்னமெண்ட் பக்கம் முழுமையாக செலுத்த முடியாத நிலை. புதிய திட்டங்களை எல்லாம் சாம்பியன்ஷிப் ஆட்டங்களில் ஆடிக் கொள்ளலாம், டோர்ணமெண்டைப் பொறுத்த வரை தோற்காமல் ஆடினால் போதும் என்கிற மனநிலையிலேயே ஆடி வருகிறார். அடுத்த சாம்பியன்ஷிப்புக்கு 2 வருடங்கள் இருக்கும் நிலையில், இந்த போட்டியிலாவது ஆனந்த் தடையின்றி ஆடுவாரா என்று பார்க்க வேண்டும்.

ஆனந்திடம் தோற்ற பின், டொபலோவ் ஒலிம்பியாடில் ஆடினார். இரண்டுக்கும் இடையில் அவருக்கு திருமணம் ஆகியுள்ளது. அதனாலோ, அல்லது வெறு எதனாலோ ஒலிம்பியாடில் டொபலோவால் சோபிக்க முடியவில்லை. சோஃபியாவில் தோற்ற பின், ஆனந்தை இங்கு டொபலோவ் ஆடுகிறார். சென்ற வருடம் கார்ல்சனிடம் தோற்றதற்கும் பழி வாங்கக் காத்திருப்பார் டொபலோவ். இவருடைய ஆட்ட்ங்களில் சரவெடிகள் பல வெடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

நேற்று தொடங்கிய ஆட்டங்களில் கார்ல்சன் பார்காடை வென்று மீண்டும் லைவ் ரேட்டிங்கில் நம்பர் 1 ஆனார். ஆபிஸ் வேளையில் நடந்த ஆட்டங்களை கவனிக்க முடியவில்லை. மற்ற ஆட்டங்கள் எல்லாம் டிராவில் முடிந்தன. ஆனந்த் முன்பெல்லாம் டோர்னமெண்டில் 1.e4-ல் ஆட்டத்தைத் தொடங்குவார். கிராம்னிக்குடனும், டொபலோவுடனும் ஆடிய சாம்பியன்ஷிப் ஆட்டங்களில் ஷாக் வால்யூக்காக 1.d4-க்குத் தாவினார். நேற்றைய ஆட்டத்தில், டோர்னமெண்ட் என்ற போதும், 1.d4-ல் தொடங்கியுள்ளார். வாங்-யூ தவறு ஏதும் செய்யாத நிலையில், ஆனந்த் சந்தோஷமாக டிராவை ஏற்றுக் கொண்டார்.

போட்டியைப் பார்த்த ரசிகர்கள், மீண்டும், “கில்லர் இன்ஸ்டிங்ட் ஆனதுக்கு இல்லை. டோர்ணமெண்டை கடனுக்கு ஆடுகிறார். டோர்ணமெண்டைப் பொறுத்த மட்டும் ஆனந்தை “டிரானந்த்” என்றால் மிகையாகாது. 2.5 வருடங்களுக்கு மேலாக எந்தடோர்ணமெண்டையும் ஆனந்த் வெல்லவில்லை.”, என்றெல்லாம் புலம்ப ஆரம்பித்துவிட்டனர். இதில் கொஞ்சம் உண்மை உண்டென்ற போதும், நிறைய அதீதம்.

பத்து ஆட்டங்கள் கொண்ட டோர்னமெண்டில், கடைசி ஆட்டத்தில் கூட நிலை மாறக் கூடும். ஆனந்த் ரசிகர்கள் இந்தப் புலம்பல்களை போட்டி முடிந்ததும் சொல்வதே சரி:-)

இன்று ஆனந்த் கார்ல்சனுடன் ஆடுகிறார். உலக சாம்பியன் Vs உலக நம்பர் 1. ஆனந்த் நிதானமாக ஆடி கார்ல்சனை ஆழம் பார்ப்பார் என்றே தோன்றுகிறது.

டோர்னமெண்டில் வலைத்தளம்: http://www.chess-pearlspring.com/www/chess_pk/2009/en/index.htm

இந்தியாவில் சூப்பர் கிரான்மாஸ்டர் டோர்னமெண்ட் எப்போது நடக்கும்?

பல வருடங்களாக கோரஸ் செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. கோரஸ் கம்பெனியை டாடா நிறுவனம் வாங்கி விட்ட நிலையில், அதை இந்தியாவுக்கு மாற்றுவது சுலபமாகாதா?

மனமிருந்தால் மார்கபந்து!

இந்த வாரம் விளையாட்டு ரசிகர்களுக்கு எக்கெச்செக்க தீனி.

காமன் வெல்த் ஆட்டங்களில் இந்தியா பட்டையை கிளப்புகிறது. துப்பாக்கி சுடுதலை பார்பதற்கு ஒன்றும் சுவாரஸ்யமாக (எனக்கு) இல்லை என்ற போதும் இந்தியா நிறைய பதக்கங்கள் அள்ளியதைக் குறித்து மகிழ்ச்சி.

எனக்கு சுமாராக விளையாட வரும் ஆட்டம் டேபிள் டென்னிஸ் என்பதால், அதனை விரும்பிப் பார்த்தேன். யான்-ஓவ்-வால்ட்னர் காலத்திலிருந்து டேபிள் டென்னிஸை டிவி-யில் தொடர்ந்து பார்க்கும் பிரகஸ்பதி நானாகத்தான் இருப்பேன்.

90-களில் அவரைப் பற்றி எப்போதாவது ஸ்போர்ஸ்டாரில் வரும் செய்திகளை கத்திர்த்து வைத்துக் கொள்வேன். (அவை எல்லாம் எங்கே போயிற்றோ). இந்த காமன் வெல்த் ஆட்டங்களிலும் டேபிள் டென்னிஸை தொடர்ந்து பார்த்தேன்.

குழு ஆட்டங்களில் ஆண்கள் வெங்கலமும், பெண்கள் வெள்ளியும் வென்றனர். சைனா காமன்வெல்தில் இல்லாத நிலையில், தங்கமே வென்றிருக்கலாம். தனி நபர் ஆட்டங்களில் அசந்தா ஷரத்கமல் தங்கம் வெல்வார் என்று நம் இக்கை இருந்தது.அவரும் கவுழ்த்துவிட்டார். எதிர்பாரா வண்ணம் சாஹாவுடன் சேர்ந்து ஷரத் கமல் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றார். நேற்று இரவு ஹைலைட்ஸ் பார்த்தேன். த்ரில்லிங் ஆட்டம். ஆளுக்கு இரண்டு செட் வென்ற நிலையில், சாஹா அற்புதமாய் பல அதிரடி ஷாட்கள் ஆடினார். 11-8 என்று கடைசி செட்டை வென்று இன்னொரு தங்கம் இந்தியாவுக்குக் கிடைக்கச் செய்தனர்.

ஹாக்கியிலும், edge of the seat thriller. சினிமாவில் வருவது போல, கடைசி நிமிடம் வரை பின் தங்கி இருந்து, 1-3 deficit-ஐ நீக்கி, பினால்டி ஸ்ட்ரோக்கில் ஒரு கோல் வித்தியாசத்தில் இந்தியா வந்தது. ஷாருக் கான் கேமிராவை கொண்டு வந்திருந்தால், சக்-தே இந்தியா பட ஷூட்டிங் செலவு மிச்சமாயிருக்கும். இந்தியா முதன் முரையாய் இறுதி ஆட்டத்துக்குச் செல்கிறது. ஆஸ்திரேலியாவை வெல்வது கடினம் என்றாலும், India have nothing to lose என்பதால் கவலையின்றி ஆடலாம். ஒருவேளை ஜெயித்தாலும் ஜெயிக்கலாம்.

பேட்மிண்டன் அரை இறுதியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாய்னாவும், இரட்டைஅய்ர் பிரிவில் ஜ்வாலா-அஸ்வினி ஜோடியும் தகுதி பெற்றிருக்கிறது. காட்டிய கொஞ்ச நேரத்தில் இரட்டையர் ஆட்டம் பார்க்க படு சூப்பராய் இருந்தது. வழக்கமாய் ஜ்வாலாதான் அதிரடியில் இறங்குவார். அரை இறுதியில் அஸ்வினி சரமாரியாய் ஸ்மாஷ்களை அள்ளி வீசினார்.

சிங்கபூர் ஜோடியிடம் ஏற்கெனவே குழு ஆட்டங்களில் தோற்றிருந்தாலும், இப்போது ஆடுவது போலத் தொடர்ந்தால் நிச்சயம் தங்க மங்கைகள் ஆகலாம்.

ஒற்றையர் பிரிவில் சாய்னா அரை இறுதியில் சுலபமாக வென்றாலும், ஆட்டத்தில் zing மிஸ்ஸிங். அதிகம் அலட்டிக் கொள்லாமல் ஆடியது போலவே தோன்றியது. முன்பு நடந்த ஆட்டத்தில் போராட்டத்துக்குப் பின் தோற்ற மலேசிய வீராங்கனை வாங் மியூ சூ, இப்போது அடி பட்ட புலியாய் சீறுவார். சாய்னா பழைய துல்லிய ஆட்டத்துக்குத் திரும்பாவிடில் தங்கம் இழக்கும் வாய்ப்பும் உள்ளது.

இங்கிலாந்தும் இந்தியாவும் இரண்டாவது இடத்துக்கு மயிர்பிடி சண்டை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு தங்கமும் மிக மிக முக்கியமானவை.

தங்கம் என்றதும் நினைவுக்கு வருவது தடகள தங்கங்கள்தான். இம்முறை இந்தியாவுக்கு டிஸ்கஸ் த்ரோ மற்றும் 400 மீட்டர் ரிலே ஓட்டம் இரண்டிலும் தங்கம் கிடைத்துள்ளது. டிஸ்கஸில் மூன்று பதக்கங்களையுமே இந்தியர்கள் வென்றுள்ளனர். அதற்கு காரணம் அவர்கள் வீட்டில் கோபத்தில் புருஷன்மார்களை நோக்கி பாத்திரங்களை வீசுவதுதான் என்று ஒரு வதந்தி உலவுகின்றது. ரிலே ரேஸும் பார்க்க விறுவிறுப்பாய் இருந்தது, முதல் இரண்டு leg-ல் பின் தங்கி இருந்த இந்திய அணி, மூன்றாவதில் விட்டததைப் பிடித்து, நான்காவதில் கிடைத்ததைத் தக்க வைத்து தங்கத்தை வென்றது.

கிரிக்கெட்டே கதி என்ற நாட்டில், இது போன்று மற்ற ஆட்டங்களில் உழைத்து, வெற்றியும் பெரும் இவர்களைப் பொன்றவர்களை எவ்வளவு போற்றினாலும் தகும். ஜாவா கோர்ஸ், கமாஸில் ஜாவளி, நுனி நாக்கு ஆங்கிலம், அமெரிக்க மாப்பிளை என்று வாழ்க்கையை பிளான் செய்து கொள்ளாமல், சொந்த முயற்சியினால் இது போன்ற தடகள ஆட்டங்களில் தீவிரமாய் ஈடுபடும் வீராங்கனைகளுக்கு ஹாட்ஸ் ஆஃப்.

காமன்வெல்த் தவிர, தலைவர் ஆனந்த் பில்போ-வில் ஆடிக் கொண்டிருக்கிரார். கார்லசனை வென்றதன் மூலம், தற்போதைய தர வரிசையில் உலக நம்பர் 1 ஆகவும் விளங்குகிறார். இதுவரை நடந்த ஆட்டங்களில் 1 வெற்றியும் மூன்று டிராகளும் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். கிராம்னிக் இரண்டு வெற்றிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார்.

கார்ல்சன் சொதப்பலாய் ஆரம்பித்தாலும், இப்போது நன்றாக ஆட ஆரம்பித்துள்ளார். ஷுரோவுடனான ஆட்டம் 175 நகர்த்தல்கள் வரை சென்றது. பல நேரங்களில் கார்சனின் கை ஓங்கி இருந்த போதும், அதை வெற்றியாக்க முடியாமல் போனது. நேற்ரைய ஆட்டத்தில் one-pawn-down நிலையிலும், end game பிஸ்தாவான கிராம்னிக்கிடம் மிகவும் போராடி டிராவைப் பெற்றார். 2009-ல் தொட்டதெல்லாம் தங்கமான கார்ல்சனுக்கு, இந்த வருட ஒலிம்பியாடும், பில்போ மாஸ்டர்ஸும் சறுக்கல்கள்தான். மாடலிங்கில் கவனம், டீனேஜுக்குரிய கவனச் சிதறல்கள், over confidence, திமிர்த்தனன் என்று பல காரணங்களை ரசிகர்கள் கார்ல்சனின் சரிவுக்குக் காரணமாகக் கூறுகின்றனர். சரிவு வராத ஆட்டக்காரரே கிடையாது. இதெயெல்லாம் கார்ல்சன் பொருட்படுத்த மாட்டார் என்றே நினைக்கிறேன். இந்த வருடம் போனால் அடுத்த வருடம். அவருக்கென்ன வயசுக்கா பஞ்சம்?

கலியுக பிரத்யட்ச அவதாரம் என்று பலரால் கன்னத்தில் போட்டுக் கொள்ளப்படும் திருவாளர் ரொஜர் ஃபெடரர் மகராஜ், ஷாங்காயில் ஆடிக் கொண்டிருக்கிறார். எப்படியோ நல்ல படியாய் ஆடி, அடுத்த வருட கிராண்ட் ஸ்லாம் போட்டிகளை இன்னும் சில பட்டங்களை வென்று, குறிப்பாய் சம்பிராஸின் விம்பில்டன் ரிக்கார்டை உடைக்க வேண்டி பலர் பூ மிதிக்கு வேண்டிக் கொண்டிருப்பதாக நம்பவே முடியாத வட்டாரச் செய்திகள் கூறுகின்றன.

சென்ற வார இறுதியில் பல ஆட்டங்கள்.

சாய்னா நெஹ்வால் காலிறுதியில் தோல்வியுற்றார். சமயத்தில் இது போன்ற தோல்விகளும் ஆட்டத்தை விருத்தி செய்ய உதவும். தோல்விக்குப் பின் புயலாக புறப்படுவார் என்று நம்புவோம். ராஜீவ் காந்தி கேல் ரத்னாவை வென்றிருக்கும் இவரை வாழ்த்துவோம்.

ஆனந்த் இரண்டு நாளாய் ரேபிட் ஆட்டங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார். உலகின் நம்பர் ஒன் கார்ல்ஸன், நார்வேயின் சிறந்த வீரர் (கார்ல்ஸனைத் தவிர) ஹாமர் மற்றும் ஜூடி போல்கர் பங்கேற்கும் போட்டியில் டபுள் ரவுண்ட் ராபின் முறையில் இரண்டு நாள் ஆட்டங்கள் முடிவடைந்துவிட்டன. ஆனந்த் கார்ல்ஸனிடம் இரண்டு ஆட்டங்களிலும் டிரா செய்தார். மற்ற இருவரிடமும் நான்கு ஆட்டங்களில் சுலபமாகவே வென்றார்.

இன்று மாலை முதலிடத்துக்கான இறுதி ஆட்டம் கார்ல்ஸனுக்கும் ஆனந்துக்கும் இடையே நடக்கவிருக்கிறது.

எனக்கென்னமோ ராபிட் ஆட்டங்கள் பார்க்கப் பிடிப்பதில்லை. பிடிப்பதில்லை என்று சொல்வ்சதை விட, அந்த வேகத்துக்கு ஈடுகொடுத்துப் பார்க்க முடிவதில்லை. 4 மணி நேரம் நடக்கும் கிளாசிகல் ஆட்டங்களில் கணினி உதவியுடன் நகர்த்தல்களை ஆய்ந்து நாம் அறிந்து கொள்ள நிறைய வாய்ப்புகள் உண்டு. 20 நிமிடங்களுக்குள் 60 நகர்த்தல்களுக்கு மேல் நடக்கும் ராபிட் ஆட்டங்களில் அவ்வாறு ஃபாலோ செய்வது கடினம்.

இறுதி ஆட்டத்தைப் பார்க்க விழைபவர்கள் இங்கு காணலாம்: http://www.chessdom.com/news-2010/anand-carlsen-hammer-polgar-live

chessbase.com-ல் போட்டி பற்றிய விவரங்கள், ஆட்டங்களின் அலசல், படங்கள், விடியோ என்று நிறையவே காணக் கிடைக்கிறது.

ஷுமாக்கர் மீண்டும் ஜெயிக்காததை இன்று பேப்பரில் பார்த்துத் தெரிந்து கொண்டேன். வெறு எவன் ஜெயித்தால் எனக்கென்ன?

அமெரிக்க ஓபன் இன்று தொடங்குகிறது. டென்னிஸ் ரசிகர்களுக்கு சிவராத்திரி ஆரம்பம். என் ஆதர்ச புருஷர்களுள் ஒருவரான போரிஸ் பெக்கர், பட்டத்தை ஃபெடரரோ, முர்ரேயோ வெல்லக் கூடும் என்கிறார். பார்ப்போம் என்ன ஆகிறதென்று.

பெண்கள் பிரிவில் ஏதோ வாயில் நுழையாத பெயரைக் கொண்ட டென்மார்க் வீராங்கனைக்கு முதல் சீடாம். இது வரை எந்த கிராண்ட் ஸ்லாமும் வெல்லாதவர் மற்ற போட்டிகளில் செர்த்துக் கொண்ட புள்ளிகளின் மூலம் மட்டுமே நம்பர் ஒன் சீடாக முடிவது ஆச்சரியம்தான். கிராண்ட் ஸ்லாமில் எல்லாம் தோற்றும் உலக நம்பர் 1-ஆக பல மாதங்கள் இருந்த சஃபினாவைப் பார்க்க இது தேவலாம். தனது சீடிங்குக்கு பொருத்தமாக ஆடுவாரா வோஸ்னியாகி என்று பார்ப்போம்.

இங்க்லிஷ் பிரிமியர் லீகில் லிவர்பூல் ஒரு வழியாய் முதல் வெற்றியைக் கண்டது. மான்சஸ்டர் சிடி-யிடம் தர்ம அடி வாங்கியதன் பாதிப்பிலிருந்த வெளி வர இந்த வெற்றி உதவக் கூடும். உலகக் கோப்பையில் சோபிக்காது போன டொரேஸ் அடித்த கோலில் 1-0 என்று West Bromwich Albion-ஐ வென்றது.

மூன்று ஆட்டங்களில் மூன்று வெற்றிகளைப் பெற்று செல்ஸி முதல் இடத்தில் உள்ளது. சில வாரங்களுக்குள் இந்த நிலை மாறினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

அமெரிக்க ஓபன் அப்டேட்டுன் விரைவில் வருகிறேன். அது வரை ஃபெடரரின் இந்த சாகஸத்தைப் பார்த்து மகிழுங்கள்: http://www.huffingtonpost.com/2010/08/20/roger-federers-trick-shot_n_688197.html

Follow

Get every new post delivered to your Inbox.